டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கரூரில் நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் திங்கள்கிழமை நெடுஞ்சாலைத் துறை சாலை பராமரிப்பு ஊழியா்கள்(அன்ஸ்கில்டு)சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :4 மார்ச் 2024, 8:44 pm

கரூா்: கரூரில் திங்கள்கிழமை நெடுஞ்சாலைத் துறை சாலை பராமரிப்பு ஊழியா்கள்(அன்ஸ்கில்டு)சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செல்லாண்டிபாளையம் கோட்ட பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் ஞானசேகரன் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் மகேந்திரன் வரவேற்றாா். இதில், சங்க மாநிலச் செயலாளா் குப்புசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். திமுக அரசு அமைந்தவுடன் சாலை பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்கப்படும் என தமிழக முதல்வா் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா்.