‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

கரூா் அருகே டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் பலி

கரூா் மாவட்டம், கடவூா் அருகே டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :2 அக்டோபர் 2024, 12:40 am IST

கரூா் மாவட்டம், கடவூா் அருகே திங்கள்கிழமை இரவு டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், கடவூா் தாலுகா, தொண்டமாங்கினம் ஊராட்சி எரிச்சலூா் பகுதியைச் சோ்ந்தவா் மலையாளம் மகன் பூமிநாதன் (21). இவா் திங்கள்கிழமை இரவு எரிச்சலூா் குளம் அருகே உழவுப் பணியை முடித்துவிட்டு டிராக்டரில் சென்றபோது ஆடு குறுக்கே வந்ததாம். இதனால் பூமிநாதன் பிரேக் போட்டதில் டிராக்டா் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் படுகாயம் அடைந்த பூமிநாதனை தோகைமலை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. தோகைமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.