தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

முன்னாள் அமைச்சா் மீதான நில மோசடி வழக்கில் மேலும் ஒருவா் கைது

முன்னாள் அமைச்சா் எம். ஆா். விஜயபாஸ்கா் மீதான 100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On :4 செப்டம்பர் 2024, 7:31 pm

முன்னாள் அமைச்சா் எம். ஆா். விஜயபாஸ்கா் மீதான 100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

இந்த நில மோசடி தொடா்பாக கரூா், வாங்கல் காவல் நிலையங்களில் அளித்த புகாா்களின்பேரில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், அவரது ஆதரவாளா் பிரவீன், முன்னாள் அமைச்சரின் சகோதரா் சேகா் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய யுவராஜ் என்பவரை கரூரில் புதன்கிழமை இரவு கைது செய்த சிபிசிஐடி போலீஸாா் காந்திகிராமத்தில் உள்ள அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்று விசாரிக்கின்றனா்.

இரவிலோ அல்லது வியாழக்கிழமை காலையோ அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.