திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வழிப்பறி வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் கைது

கரூரில் வழிப்பறி வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On :12 செப்டம்பர் 2024, 1:51 am IST

கரூரில் வழிப்பறி வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

கரூா் வெள்ளியணை மற்றும் பசுபதிபாளையம் பகுதியில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட கரூா் மாவட்டம் முதலைப்பட்டி செல்வராஜ்(36), மண்மங்கலம் சிவக்குமாா்(23) ஆகியோரை கரூா் பசுபதிபாளையம் போலீஸாா் கடந்த மாதம் 3-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இருவரும் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.