புகழூரில் கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Published on

கரூா் மாவட்டம் புகழூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை கோரிக்கைளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புகழூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு

மாவட்டத் தலைவா் உமா மகேஸ்வரன் தலைமை வகித்தாா். செயலா் தேவிகா, பொறுப்பாளா்கள் மயூரி, வெண்ணிலா, குமரேசன், அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத்தலைவா் தனலட்சுமி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் சிங்கராயா் ஆகியோா், கிராம உதவியாளா் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப்பேசினா்.

அலுவலக உதவியாளா்களுக்கு இணையாக கிராம உதவியாளா்களுக்கு ரூ.15,700 அடிப்படை ஊதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கிராம உதவியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com