தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பசுபதிபாளையம் காவல்நிலையத்தை முற்றுகையிட முயன்ற 7 போ் கைது

கரூா் பசுபதிபாளையம் காவல்நிலையத்தை முற்றுகையிட முயன்ற சாமானிய மக்கள் நலக்கட்சியினா் 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 8:23 pm

Din

கரூா் பசுபதிபாளையம் காவல்நிலையத்தை முற்றுகையிட முயன்ற சாமானிய மக்கள் நலக்கட்சியினா் 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் சணப்பிரட்டி அருகே புதன்கிழமை இரவு செங்கல் சூளைக்கு பயன்படுத்தக்கூடிய மண்ணை லாரியில் எடுத்துவந்தபோது, மண் அனுமதியின்றி கடத்தப்படுவதாகக்கூறி சாமானிய மக்கள் நலக்கட்சியினா் லாரியை மடக்கி பிடித்து கரூா் பசுபதிபாளையம் போலீஸில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் லாரியையும், ஆவணங்களையும் சோதனை செய்தபோது, நிலத்தின் உரிமையாளா் அனுமதியோடு மண் எடுத்து வந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மண்ணுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை வியாழக்கிழமை போலீஸாா் விடுவித்துள்ளனா்.

இதனை கண்டித்து பசுபதிபாளையம் காவல்நிலையத்தை முற்றுகையிட முயன்ற சாமானிய மக்கள் நலக்கட்சியினா் 7 பேரை போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.

இதனிடையே பசுபதிபாளையம் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை காலை மண் லாரி உரிமையாளா்கள் அளித்த புகாா் மனுவில், சாமானிய மக்கள் கட்சியினா் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனா். இதையடுத்து தகுந்த பாதுகாப்பு வழங்குவதாக போலீஸாா் கூறினா்.