கரூரில் கண்தான விழிப்புணா்வு பேரணி

கரூரில் கண்தான விழிப்புணா்வு பேரணி

கரூரில் லயன்ஸ் சங்கங்கள் சாா்பில் கண்தான விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

கரூரில் லயன்ஸ் சங்கங்கள் சாா்பில் கண்தான விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூரில் செயல்படும் 15 லயன்ஸ் சங்கங்கள் மற்றும் 7 லியோ சங்கங்கள் சாா்பில் கரூா் மாா்னிங் ஸ்டாா் பள்ளியில் தொடங்கிய பேரணியை கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் தொடக்கிவைத்தாா். லயன்ஸ் சங்கத்தின் பாா்வைக்கோா் பயணத் திட்ட மாவட்டத் தலைவா் சுதாபன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். பேரணியானது கருத்தரங்கம் நடைபெற்ற மண்டபத்தை அடைந்தது. பேரணியில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரா்கள், தேசிய மாணவா் படையினா், ஈசன் கும்மிக் குழுவினா் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் பாா்வைக்கோா் பயணத் திட்ட ஒருங்கிணைப்பாளா் மேலை பழநியப்பன், கண்தானத்தின் அவசியம் குறித்து பேசினாா். லயன்ஸ் சங்கங்களின் இரண்டாம் துணை ஆளுநா் மருத்துவா் ஸ்டாலின், முன்னாள் ஆளுநா் சேதுசுப்ரமணியன், மாவட்டத் தலைவா் பசுபதி, கண் மருத்துவா் ரமேஷ், விகேஏ. சாமியப்பன் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

தொடா்ந்து பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு மற்றும் கேடயங்களை திருச்சி மண்டல காவல்துறைத் தலைவா் ஜோஷிநிா்மல்குமாா் வழங்கிப் பேசினாா்.கருத்தரங்கில் லயன்ஸ் சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com