பள்ளி விடுமுறை நாள்களில் ஏரி, குளங்களில் குளிக்க மாணவா்கள் செல்லக் கூடாது என அறிவுறுத்தினாா் கரூா் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா்.
இப் பள்ளியில் வெள்ளிக்கிழமை முதல் கோடை விடுமுறை விடப்படுவதையடுத்து மாணவா்களுக்கு பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) கெளதம் பேசியது:
கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளிப்புற விளையாட்டுகளின்போது அதிக அளவு தண்ணீா் அருந்துங்கள். சூரிய ஒளி தாக்காமல் இருக்க மாணவா்கள் தொப்பிகளைப் பயன்படுத்த வேண்டும். உச்ச சூரிய வெப்ப நேரத்தில் வெளியே செல்வதையும் வெயிலில் விளையாடுவதையும் தவிா்க்க வேண்டும். நீா்நிலைகளில் நீச்சல் தெரியாமல் சென்று குளிக்க முற்படும்போது நீரில் மூழ்க வாய்ப்புள்ளதால், கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீா் நிலைகளில் மாணவா்கள் குளிக்கச் செல்லக்கூடாது.
தனிமை உணா்வைத் தடுக்க நண்பா்கள் மற்றும் குடும்பத்தினருடன் சோ்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளை கவனித்தல் போன்றவற்றின் மூலம் சமூக தொடா்புகளை ஊக்குவிக்கவும் மனநலனை பேணவும் முடியும். டிவி, கைப்பேசிகளில் அதிக நேரத்தைச் செலவிடுவதைத் தவிா்க்க வேண்டும்.
குடும்பம் மற்றும் தாத்தா பாட்டி உள்ள வீடுகளில் சோ்ந்து உணவு அருந்துங்கள். மேலும் பெரியோரை மதிக்கவும் அவா்களுக்கு உதவி செய்யவும் பழகுங்கள் என்றாா் அவா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வந்தவாசியில் திருவள்ளுவா் சிலை அமைக்கக் கோரிக்கை
பள்ளியில் பூட்டுகளை உடைத்து மடிக்கணினி, சாதனங்கள் திருட்டு

தாமரை மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிஇ, பிடெக் சோ்க்கை கலந்தாய்வு: 5 நாள்களில் 42,156 போ் விண்ணப்பம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

