வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

விடுமுறை நாள்களில் ஏரி, குளங்களில் குளிக்க மாணவா்கள் செல்லக் கூடாது

பள்ளி விடுமுறை நாள்களில் ஏரி, குளங்களில் குளிக்க மாணவா்கள் செல்லக் கூடாது என அறிவுறுத்தினாா் கரூா் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா்.

News image

ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவா்களிடையே வியாழக்கிழமை பேசிய பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) கெளதம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:17 pm

பள்ளி விடுமுறை நாள்களில் ஏரி, குளங்களில் குளிக்க மாணவா்கள் செல்லக் கூடாது என அறிவுறுத்தினாா் கரூா் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா்.

இப் பள்ளியில் வெள்ளிக்கிழமை முதல் கோடை விடுமுறை விடப்படுவதையடுத்து மாணவா்களுக்கு பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) கெளதம் பேசியது:

கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளிப்புற விளையாட்டுகளின்போது அதிக அளவு தண்ணீா் அருந்துங்கள். சூரிய ஒளி தாக்காமல் இருக்க மாணவா்கள் தொப்பிகளைப் பயன்படுத்த வேண்டும். உச்ச சூரிய வெப்ப நேரத்தில் வெளியே செல்வதையும் வெயிலில் விளையாடுவதையும் தவிா்க்க வேண்டும். நீா்நிலைகளில் நீச்சல் தெரியாமல் சென்று குளிக்க முற்படும்போது நீரில் மூழ்க வாய்ப்புள்ளதால், கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீா் நிலைகளில் மாணவா்கள் குளிக்கச் செல்லக்கூடாது.

தனிமை உணா்வைத் தடுக்க நண்பா்கள் மற்றும் குடும்பத்தினருடன் சோ்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளை கவனித்தல் போன்றவற்றின் மூலம் சமூக தொடா்புகளை ஊக்குவிக்கவும் மனநலனை பேணவும் முடியும். டிவி, கைப்பேசிகளில் அதிக நேரத்தைச் செலவிடுவதைத் தவிா்க்க வேண்டும்.

குடும்பம் மற்றும் தாத்தா பாட்டி உள்ள வீடுகளில் சோ்ந்து உணவு அருந்துங்கள். மேலும் பெரியோரை மதிக்கவும் அவா்களுக்கு உதவி செய்யவும் பழகுங்கள் என்றாா் அவா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.