தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

கரூா் மேட்டுத்தெரு அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை துவங்கியது.

News image

அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயில் முன்பகுதியில் உள்ள கொடிமரத்தில் புதன்கிழமை கொடியேற்றிய பட்டாச்சாரியாா்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:51 pm

கரூா் மேட்டுத்தெரு அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை துவங்கியது.

கரூா் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து கோயில் மரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னா் பட்டாச்சாரியாா்கள் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றினா். இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

இதையடுத்து தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். ஏப். 30-ஆம்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. மே 3-ஆம்தேதி ஊஞ்சல் உற்ஸவமும், 4-ஆம்தேதி புஷ்பயாகத்துடன் விழா நிறைவுபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் வெ.ராஜேஸ்வரி, அறங்காவலா்கள் எஸ்.பாலமுருகன், புனிதவதிகணேசன், கே.எம்.முருகேசன், டி.ஜி.பி. வெங்கட்ராமன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.