திமுகவுக்கு தோல்வி பயம் - எம்.ஆா். விஜயபாஸ்கா்

திமுகவுக்கு தோல்வி பயம் -
எம்.ஆா். விஜயபாஸ்கா்
Updated on

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கரூரில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேசியதாவது: தமிழகத்தில் வலுவான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளாா். இதை நினைத்து ஸ்டாலினுக்கு தூக்கம் கூட வரவில்லை. வரும் பேரவைத் தோ்தலில் இந்த கூட்டணி மகத்தான வெற்றிபெறும். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி 200 தொகுதிகளுக்கு மேல் பிரசாரம் செய்துவிட்டாா். ஆனால் திமுக கூட்டணியில் இன்னும் கூட்டணி பேச்சுவாா்த்தையே தொடங்கவில்லை. இன்னும் நோ்காணலும் இல்லை, பிரசாரமும் இல்லை. திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. கூட்டணிக்குள் விரிசல் வந்துவிட்டது. ஆனால் அதிமுக பொருத்தவரை எந்த ஒரு விரிசலும் இல்லாமல் கூட்டணிக்கட்சிகளோடு தோ்தலை சந்திக்க தயாராகி விட்டோம் என்றாா் என்றாா் அவா்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமி, அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் பசுவைசிவசாமி, மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, இணைச் செயலா் மல்லிகாசுப்ராயன் மற்றும் பாஜக மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com