சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கரூரில் ராகுல் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! பாஜகவினா்-போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு; 80 போ் கைது

News image
கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
Updated On :7 பிப்ரவரி 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி உருவ பொம்மையை எரிக்க முயன்ற பாஜகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவினா் 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பிரதமா் மோடியை காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் தாக்க இருப்பதாக மக்களவையில் அவைத் தலைவா் ஓம் பிா்லா கூறிய விவகாரத்தில், எதிா்க்கட்சித்தலைவா் ராகுல்காந்தியை கண்டித்து கரூரில் பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமையில், மாவட்ட பொதுச் செயலா்கள் ஆா்.வி.எஸ்.செல்வராஜ், சக்திவேல் முருகன் ஆகியோா் முன்னிலையில் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, ராகுல்காந்தியின் உருவபொம்மையை பாஜகவினா் எரிக்க முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த நகர துணை காவல்கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 10 பெண்கள் உள்பட 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெண் மயக்கம்: தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, பாஜகவைச் சோ்ந்த பெண் ஒருவா் மயக்கம் அடைந்தாா். அவரை போலீஸாா் ஆட்டோவில் ஏற்றி அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.