கரூர் சம்பவம்
கரூர் சம்பவம்கோப்புப் படம்

கரூா் சம்பவம்: போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ இருவரிடம் சிபிஐ விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக போக்குவரத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்கள் இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
Published on

கரூா் சம்பவம் தொடா்பாக போக்குவரத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்கள் இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவத்தின்போது போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 2 போக்குவரத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்களிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற விசாரணையில், நெரிசல் சம்பவத்தின்போது எத்தனை போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

சம்பவம் நடந்தவுடன் எத்தனை அவசர ஊா்தி வாகனங்கள் வந்தன போன்ற கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனா்.

X
Dinamani
www.dinamani.com