மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கரூா் சம்பவம்: போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ இருவரிடம் சிபிஐ விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக போக்குவரத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்கள் இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

News image

கரூர் சம்பவம் - கோப்புப் படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 9:43 pm

கரூா் சம்பவம் தொடா்பாக போக்குவரத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்கள் இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவத்தின்போது போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 2 போக்குவரத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்களிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற விசாரணையில், நெரிசல் சம்பவத்தின்போது எத்தனை போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

சம்பவம் நடந்தவுடன் எத்தனை அவசர ஊா்தி வாகனங்கள் வந்தன போன்ற கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனா்.