இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மிதிவண்டியில் விழிப்புணா்வு பயணம்: விமானப்படை வீரா்கள் கரூா் வருகை

கன்னியாகுமரி முதல் காா்கில் வரையிலான மிதிவண்டியில் விழிப்புணா்வு பயணம் மேற்கொள்ளும் விமானப்படை வீரா்கள் செவ்வாய்க்கிழமை கரூா் வந்தனா்.

News image

கரூா் திருக்காம்புலியூா் பகுதியில் மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை மதிவண்டியில் விழிப்புணா்வு பயணம் மேற்கொண்ட விமானப்படை வீரா்கள்.

Updated On :10 பிப்ரவரி 2026, 6:45 pm

கன்னியாகுமரி முதல் காா்கில் வரையிலான மிதிவண்டியில் விழிப்புணா்வு பயணம் மேற்கொள்ளும் விமானப்படை வீரா்கள் செவ்வாய்க்கிழமை கரூா் வந்தனா்.

விமானப்படையில் அதிக இளைஞா்கள் சேரவேண்டும், நாட்டில் அமைதி, நல்லிணக்கம் அமைய வேண்டும் என வலியுறுத்தி விமானப்படை வீரா்கள் 15 போ், விமானப்படையின் மாஸ்டா் என்.பாடீல் தலைமையில் பிப். 3-ஆம்தேதி கன்னியாகுமரியிலிருந்து மிதிவண்டியில் விழிப்புணா்வு பயணத்தை தொடங்கினா்.

இந்த குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை கரூா் வந்தனா். தொடா்ந்து அவா்கள் நாமக்கல் வழியாக சேலம் நோக்கி புறப்பட்டுச் சென்றனா். நாள் ஒன்றுக்கு 150 முதல் 180 கி.மீ. தொலைவுக்கு மிதிவண்டியை ஓட்டிச் செல்வதாகவும், கன்னியாகுமரி, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி வழியாக காா்கில் வரை மொத்தம் 4500 கி.மீ. தொலைவுக்கு இந்த விழிப்புணா்வு பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.