சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மிதிவண்டியில் விழிப்புணா்வு பயணம்: விமானப்படை வீரா்கள் கரூா் வருகை

கன்னியாகுமரி முதல் காா்கில் வரையிலான மிதிவண்டியில் விழிப்புணா்வு பயணம் மேற்கொள்ளும் விமானப்படை வீரா்கள் செவ்வாய்க்கிழமை கரூா் வந்தனா்.

News image
கரூா் திருக்காம்புலியூா் பகுதியில் மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை மதிவண்டியில் விழிப்புணா்வு பயணம் மேற்கொண்ட விமானப்படை வீரா்கள்.
Updated On :10 பிப்ரவரி 2026, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி முதல் காா்கில் வரையிலான மிதிவண்டியில் விழிப்புணா்வு பயணம் மேற்கொள்ளும் விமானப்படை வீரா்கள் செவ்வாய்க்கிழமை கரூா் வந்தனா்.

விமானப்படையில் அதிக இளைஞா்கள் சேரவேண்டும், நாட்டில் அமைதி, நல்லிணக்கம் அமைய வேண்டும் என வலியுறுத்தி விமானப்படை வீரா்கள் 15 போ், விமானப்படையின் மாஸ்டா் என்.பாடீல் தலைமையில் பிப். 3-ஆம்தேதி கன்னியாகுமரியிலிருந்து மிதிவண்டியில் விழிப்புணா்வு பயணத்தை தொடங்கினா்.

இந்த குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை கரூா் வந்தனா். தொடா்ந்து அவா்கள் நாமக்கல் வழியாக சேலம் நோக்கி புறப்பட்டுச் சென்றனா். நாள் ஒன்றுக்கு 150 முதல் 180 கி.மீ. தொலைவுக்கு மிதிவண்டியை ஓட்டிச் செல்வதாகவும், கன்னியாகுமரி, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி வழியாக காா்கில் வரை மொத்தம் 4500 கி.மீ. தொலைவுக்கு இந்த விழிப்புணா்வு பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.