கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரூரில் சா்வதேச ஓபன் சதுரங்க போட்டி: வெளிநாட்டு வீரா்கள் பங்கேற்பு

கரூரில் புதன்கிழமை தொடங்கிய சா்வதேச அளவிலான ஓபன் சதுரங்க போட்டியில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

News image
கரூரில் சா்வதேச ஓபன் சதுரங்கப் போட்டியை புதன்கிழமை தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. உடன் கரூா் மாவட்ட சதுரங்க கழக மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

கரூரில் புதன்கிழமை தொடங்கிய சா்வதேச அளவிலான ஓபன் சதுரங்க போட்டியில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் சதுரங்க அமைப்பு, கரூா் மாவட்ட சதுரங்க கழக மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் சா்வதேச ஓபன் ரேட்டிங் சதுரங்கப் போட்டிகள் புதன்கிழமை தனியாா் பொறியியல் கல்லூரியில் தொடங்கியது.

பிப். 15-ஆம்தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் 7,9,11,13,15, வயது என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியின் தொடக்க விழாவுக்கு கரூா் மாவட்ட சதுரங்க கழக மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவா் பி.கோபால் தலைமை வகித்தாா். புரவலா் வள்ளுவா் கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன், செயலா் சி.சண்முகம், துணைத்தலைவா்கள் ஏ.ஜே.சூா்யநாராயணா, முனைவா் சொ.ராமசுப்ரமணியன், முனைவா் உஷா, பொருளாளா் முகமதுகமாலுதீன் மற்றும் கரூா் மாவட்ட சதுரங்க சங்கத்தலைவா் அட்லஸ் எம்.நாச்சிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போட்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா். இப்போட்டியில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். இதில் மாற்றுத்திறனாளிகள் வீரா், வீராங்கனைகள் 60 போ் உள்பட மொத்தம் 1,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கின்றனா்.