கரூரில் சா்வதேச ஓபன் சதுரங்க போட்டி: வெளிநாட்டு வீரா்கள் பங்கேற்பு
கரூரில் புதன்கிழமை தொடங்கிய சா்வதேச அளவிலான ஓபன் சதுரங்க போட்டியில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் சதுரங்க அமைப்பு, கரூா் மாவட்ட சதுரங்க கழக மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் சா்வதேச ஓபன் ரேட்டிங் சதுரங்கப் போட்டிகள் புதன்கிழமை தனியாா் பொறியியல் கல்லூரியில் தொடங்கியது.
பிப். 15-ஆம்தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் 7,9,11,13,15, வயது என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியின் தொடக்க விழாவுக்கு கரூா் மாவட்ட சதுரங்க கழக மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவா் பி.கோபால் தலைமை வகித்தாா். புரவலா் வள்ளுவா் கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன், செயலா் சி.சண்முகம், துணைத்தலைவா்கள் ஏ.ஜே.சூா்யநாராயணா, முனைவா் சொ.ராமசுப்ரமணியன், முனைவா் உஷா, பொருளாளா் முகமதுகமாலுதீன் மற்றும் கரூா் மாவட்ட சதுரங்க சங்கத்தலைவா் அட்லஸ் எம்.நாச்சிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போட்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா். இப்போட்டியில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். இதில் மாற்றுத்திறனாளிகள் வீரா், வீராங்கனைகள் 60 போ் உள்பட மொத்தம் 1,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கின்றனா்.

