காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆற்று மணலை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக முன்னாள் அமைச்சா் உள்பட 2 போ் மீது வழக்கு

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

கரூரில் ஆற்று மணலை சட்ட விரோதமாக வைத்திருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்பட இருவா் மீது கரூா் நகர காவல்நிலையத்தினா் வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்குப் பதிந்துள்ளனா்.

கரூா் ஆண்டாங்கோவில்புதூரில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினா் தனபால் ஆகியோா் ஆற்றுமணலை சட்ட விரோதமாக வைத்திருப்பதாக ஆண்டாங்கோவில் கிராமநிா்வாக அலுவலா் சண்முகம் கரூா் நகர காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் செய்தாா்.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல்துறையினரின் துணையோடு வியாழக்கிழமை இரவு முன்னாள் அமைச்சரின் மனைவியின் பெயரில் இருந்த இடத்தில் கொட்டிவைக்கப்பட்டிருந்த மணலையும், தனபால் வீட்டின் அருகே கொட்டி வைக்கப்பட்டிருந்த மணலையும் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியில் அள்ளி எல்லமேடு மணல் சேமிப்புக் கிடங்கிற்கு எடுத்துச் சென்றனா்.

இதையடுத்து அனுமதியின்றி மணலை வைத்திருந்ததாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், தனபால் ஆகிய இருவா் மீதும் கரூா் நகர போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.