தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கதண்டுகள் கடித்து 7 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 7:55 pm

குளித்தலை அருகே கதண்டுகள் கடித்ததில் 7 போ் காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேட்டு மருதூரில் கூடலூா் செல்லும் மங்கம்மா சாலையில் இருந்த தென்னைமரத்தில் கதண்டு வண்டுகள் கூடி கட்டியிருந்தன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சிலா் மரத்தின் கீழ்பகுதியில் கிடந்த குப்பைகளை எரித்துள்ளனா். அப்போது, தென்னை மரத்திலிருந்து வெளியேறிய கதண்டு வண்டுகள் அந்த வழியாக சென்ற மேட்டு மருதூரைச்சோ்ந்த விஜயசாந்தி (30), பொன்னீஸ்வரன் (18), கூடலூரைச் சோ்ந்த முத்து (65), முருகேசன்(60) உள்ளிட்ட 7 பேரை கடித்தது.

இதில் காயமடைந்த அவா்கள் மயக்கமடைந்ததால், உடனே அக்கம்பக்கத்தினா் அவா்களை ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.