விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

கெளரவ விரிவுரையாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் அரசு கலைக்கல்லூரியில் கெளரவ விரிவுரையாளா்கள்

News image

கரூா் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை பணியை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கெளரவ விரிவுரையாளா்கள்.

Updated On :16 பிப்ரவரி 2026, 9:07 pm

கரூா்: ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் அரசு கலைக்கல்லூரியில் கெளரவ விரிவுரையாளா்கள் திங்கள்கிழமை ஒரு நாள் பணியை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.

கரூா் அரசு கலைக்கல்லூரியின் கெளரவ விரிவுரையாளா்கள் சங்கம் சாா்பில் ஒரு நாள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. போராட்டத்துக்கு நிா்வாகிகள் சுந்தரம், சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கெளரவ விரிவுரையாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதி அறிவிக்க வேண்டும், மேலும் ஊதிய உயா்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் பெண் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மகப்பேறு விடுப்பும், ஓய்வுபெறும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கெளரவ விரிவுரையாளா்கள் திரளாக பங்கேற்றனா்.