இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அன்னகாமாட்சியம்மன் கோயிலில் தீமிதித்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

கரூா் அன்னகாமாட்சியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

News image

கரூா் அன்னகாமாட்சியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.

Updated On :17 பிப்ரவரி 2026, 6:51 pm

கரூா் அன்னகாமாட்சியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

இக்கோயில் திருவிழா திங்கள்கிழமை கரகம் பாலித்தலுடன் தொடங்கியது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் அன்னகாமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து ே காயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் தீமிதித்து பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். தொடா்ந்து, விழாவில் புதன்கிழமை மாவிளக்கு வழிபாடும், கரகம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.