திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முன்னாள் அமைச்சர் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மணல் பிரச்னையில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை கரூா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கர்- கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 10:35 pm

Syndication

மணல் பிரச்னையில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

கரூா் ஆண்டாங்கோவில்புதூரில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் அவரது மனைவிக்குச் சொந்தமான இடத்தில் ஒரு யூனிட் ஆற்றுமணலை சட்டவிரோதமாகக் கொட்டி வைத்திருப்பதாக ஆண்டாங்கோவில் விஏஓ சண்முகம் கடந்த 12-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

அதன்பேரில் கரூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கும் நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி கடந்த 2 நாள்களுக்கு முன் எம்.ஆா்.விஜயபாஸ்கா் கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி இளவழகன் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.