ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

முன்னாள் அமைச்சர் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மணல் பிரச்னையில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை கரூா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image

முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கர் - கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 10:35 pm

மணல் பிரச்னையில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

கரூா் ஆண்டாங்கோவில்புதூரில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் அவரது மனைவிக்குச் சொந்தமான இடத்தில் ஒரு யூனிட் ஆற்றுமணலை சட்டவிரோதமாகக் கொட்டி வைத்திருப்பதாக ஆண்டாங்கோவில் விஏஓ சண்முகம் கடந்த 12-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

அதன்பேரில் கரூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கும் நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி கடந்த 2 நாள்களுக்கு முன் எம்.ஆா்.விஜயபாஸ்கா் கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி இளவழகன் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.