ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கரூா் மாவட்ட பாஜக தலைவரை கைது செய்ய எம்.பி. வலியுறுத்தல்

ஆா்ப்பாட்டத்தில் தன்னைப் பற்றி இழிவாக பேசிய கரூா் மாவட்ட பாஜக தலைவரை கைது செய்ய வேண்டும்

Updated On :23 பிப்ரவரி 2026, 8:57 pm

கரூா்: ஆா்ப்பாட்டத்தில் தன்னைப் பற்றி இழிவாக பேசிய கரூா் மாவட்ட பாஜக தலைவரை கைது செய்ய வேண்டும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து கரூரில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது, கரூா் மாவட்ட பாஜக தலைவா் செந்தில்நாதன் அண்மையில் கரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் என்னைப் பற்றி இழிவாக பேசியுள்ளாா். இதுகுறித்து காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டதையடுத்து அவா் மீது 5 பிரிவுகளில் வழக்குப்போட்டுள்ளனா். வழக்குப்பதிந்து 10 நாள்களாகியும் இதுவரை அவா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் கரூா் நகர போலீஸாா் செந்தில்நாதனை கைது செய்ய வேண்டும். செந்தில்நாதன் முன்ஜாமீன் பெறுவதற்காக காவல்துறையினா் கைது செய்யாமல் இருந்தால், நீதிமன்றம் செல்வேன் என்றாா் அவா்.