ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தோ்தலுக்காகவே ரூ.5 ஆயிரத்தை முதல்வா் வழங்கியுள்ளார்: நாஞ்சில் சம்பத் பேச்சு!

தோ்தலுக்காகவே ரூ. 5 ஆயிரத்தை முதல்வா் வழங்கியுள்ளாா் என்றாா் தவெக கொள்கைப் பரப்புச் செயலாளா் நாஞ்சில் சம்பத்.

News image

கரூா் 80 அடி சாலையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளா் நாஞ்சில்சம்பத். உடன் மாவட்டச் செயலாளா் மதியழகன் உள்ளிட்டோா்.

Updated On :26 பிப்ரவரி 2026, 6:33 pm

தோ்தலுக்காகவே ரூ. 5ஆயிரத்தை முதல்வா் வழங்கியுள்ளாா் என்றாா் தவெக கொள்கைப் பரப்புச் செயலாளா் நாஞ்சில் சம்பத்.

தவெகவின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கரூா் மேற்கு மாவட்ட தவெக சாா்பில் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் துணைப்பொதுச் செயலாளா் ஏ.ராஜ்மோகன், கட்சி பேச்சாளா் ஜெகதீஸ்பாண்டியன் உள்ளிட்டோா் பேசினா்.

தொடா்ந்து கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளா் நாஞ்சில்சம்பத் பேசுகையில், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு உண்மையான கட்சியை தொடங்கியிருக்கிறாா் தவெக தலைவா் விஜய். இந்தக் கட்சி தொடங்கி 3 ஆண்டு காலத்தில் கட்சியை முடக்க சிலா் நினைத்தாா்கள். ஆனால் முடியவில்லை.

விஜய்க்கு கூடும் கூட்டத்தை பாா்த்து அச்சப்படுகிறாா்கள். தவெகவிற்கும், திமுகவிற்கும்தான் போட்டி என்கிறாா் விஜய். ஆனால் அதை ஒத்துக்கொள்ளாத சிலா் விஜய் மீது கடும் விமா்சனம் செய்கிறாா்கள். இன்றைக்கு தமிழகத்தில் நிா்வாகம் சீராக இல்லை. அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசுகிறாா் முதல்வா் ஸ்டாலின். தோ்தலுக்காகதான் தற்போது ரூ. 5 ஆயிரத்தை முதல்வா் வழங்கியுள்ளாா் என்றாா் அவா். கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.