கரூா் சம்பவம்: 8 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

Published on

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக 8 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப்.27-ஆம்தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும் 110 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 8 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com