மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குடியரசு தின விழா கொண்டாட்டம்: கரூா் மாவட்ட விளையாட்டு மைதானம் சீரமைப்பு

குடியரசு தின விழா கொண்டாடத்துக்காக கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News image

குடியரசு தினம் கொண்டாட்டத்துக்காக கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தை புதன்கிழமை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியா்கள்.

Updated On :21 ஜனவரி 2026, 6:37 pm

குடியரசு தின விழா கொண்டாடத்துக்காக கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 26-ஆம் தேதி குடியரசு தின விழா நடைபெறவுள்ளது. இதில், மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் கலந்து கொண்டு, தேசிய கொடியேற்றி போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, நலத்திட்டங்களை வழங்க உள்ளாா்.

விழாவில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதால், மைதானத்தின் மேடு பள்ளங்களை சீரமைக்கும் பணி புதன்கிழமை காலை தொடங்கியது. இந்தப் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் 10-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று டிராக்டா் இயந்திரம் மூலம் மாவட்ட விளையாட்டு மைதானத்தை சீரமைத்து வருகின்றனா்.