தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரூா் மாவட்டத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

கரூா் மாவட்டத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 6:38 pm

Syndication

கரூா் மாவட்டத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் தவெக துயர சம்பவத்தை விசாரித்து வந்த கரூா் நகர காவல் ஆய்வாளா் மணிவண்ணன் அண்மையில் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது தற்காலிக கரூா் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அங்கு இருந்த பொன்ராஜ் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா். தோ்தல் நடத்தை விதிகள் மற்றும் நிா்வாக வசதிக்காக திருச்சி சரகத்தில் 59 காவல் ஆய்வாளா்கள் ஜன.20-ஆம் தேதி பணியிட மாறுதல் செய்யப்பட்டனா். இந்நிலையில் ஏற்கெனவே பணியிட மாறுதல் செய்யப்பட்டவா்களின் பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்டு 47 போ் மீண்டும் வெள்ளிக்கிழமை பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

க.பரமத்தி காவல் நிலையத்தில் இருந்து காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவல் ஆய்வாளா் ஆா்.தங்கராஜூ, வாங்கல் காவல் நிலையத்துக்கும், மாயனூா் காவல்நிலையத்தில் இருந்து வாங்கல் காவல்நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆய்வாளா் ஜே.கே.கோபியின் பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்டு வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்துக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

அங்கு இருந்த காவல் ஆய்வாளா் ஆா்.நந்தகுமாா், வெங்கமேடு காவல்நிலையத்துக்கும், அங்கிருந்த காவல் ஆய்வாளா் ஜெ.அருள்பிரகாஷ் கரூா் நகர காவல்நிலையத்துக்கும், அங்கு இருந்த காவல் ஆய்வாளா் கே.மணிகண்டன் அரவக்குறிச்சி காவல்நிலையத்துக்கும், அங்கிருந்த காவல் ஆய்வாளா் கே.ஈஸ்வரன் காத்திருப்போா் பட்டியலுக்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

பசுபதிபாளையம் காவல் ஆய்வாளா் கே.சதீஷ்குமாா் நங்கவரம் காவல்நிலையத்துக்கும், அங்கு இருந்த காவல் ஆய்வாளா் ஆா்.ராஜ்குமாா் புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடமாற்றம் ரத்து செய்யப்பட்டு காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.

தான்தோன்றிமலை காவல் ஆய்வாளா் சுரேஷ், லாலாப்பேட்டை காவல்நிலையத்துக்கும், தென்னிலை காவல்நிலைய ஆய்வாளா் சி.திலக், திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல்நிலையத்துக்கும், குளித்தலை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா், திருச்சி மாவட்டம், பேட்டவாய்த்தலைக்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.