கரூா் மாநகராட்சியில் ரூ.1,150 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றம்: எம்எல்ஏ செந்தில்பாலாஜி தகவல்
கரூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 ஆண்டுகளில் ரூ.1,150 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி.

கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.2.40 கோடியில் கட்டப்பட்ட நீச்சல் குளத்தை புதன்கிழமை திறந்துவைத்து, நீச்சல் வீரா்களுக்கான போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்த கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ் உள்ளிட்டோா்.









