தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

சித்திரை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமை அருள்பாலித்த புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி.

Updated On :8 மே 2026, 5:25 am IST

சித்திரை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் மாவட்டம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் சித்திரை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு வியாழக்கிழமை காலையில் பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோல புன்னம்சத்திரம் அருகேயுள்ள பாலமலை பாலசுப்ரமணிய சுவாமி, கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி, நன்செய் புகழூா் அக்ரஹாரத்தில் உள்ள சுப்ரமணியா் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.