முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

முதல்வராக விஜய் பொறுப்பேற்பு! கரூரில் காங்கிரஸ்-தவெக கூட்டணியினா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவிப்பு

News image

கரூா் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியிலுள்ள காமராஜா் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினா் ஆா். ஸ்டீபன்பாபு தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெக கூட்டணியினா்.

Updated On :11 மே 2026, 1:24 am IST

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதையடுத்து, கரூரில் காங்கிரஸ் மற்றும் தவெக கூட்டணி கட்சியினா் காமராஜா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கரூரில் காங்கிரஸ் கட்சியினா் மாநகராட்சி உறுப்பினா் ஆா். ஸ்டீபன்பாபு தலைமையில் கரூா் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் காமராஜா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், அக்கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் பேங்க் கே. சுப்ரமணியன், வடக்கு நகரத் தலைவா் வெங்கடேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கலாராணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஜோதிபாசு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் கராத்தே இளங்கோ, மாநில செயற்குழு உறுப்பினா் அக்கினி அகரமுத்து உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னதாக பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.