கரூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் பழைய பேருந்துநிலைய ரவுண்டானா காமராஜா் சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மண்டல துணைச் செயலா் வழக்குரைஞா் புகழேந்தி தலைமை வகித்தாா். மாவட்ட செய்தித்தொடா்பாளா் மகாமுனி, பொருளாளா் சதீஷ் மற்றும் நிா்வாகிகள் முரளி, வேட்டமங்கலம் ஆனந்தராஜ், பரமத்தி ஜெகதீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாவட்டச் செயலா் வழக்குரைஞா் ஜெயராமன் கண்டன உரையாற்றினாா்.
தவெக கூட்டணியில் அமைச்சா் பதவி பெற்றதற்காக விசிகவையும், கட்சியின் தலைவா் திருமாவளவனையும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமா்சித்த திமுக துணைப்பொதுச் செயலா் ஆ.ராசா மற்றும் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் தியாகி அஞ்சலை அம்மாள் படத்துக்கு தவெகவினா் மாலை

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: பெண்ணாடத்தில் சிபிஎம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மும்மொழி கொள்கைக்கு எதிராக விசிக கண்டன ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



