காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரியலூர் தேரடி பகுதியில் திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார கெடு முடிந்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.
இதைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அரியலூர் தேரடிப் பகுதியில் திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கரன் தலைமையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு, பிரதமர் மோடி உருவப்பொம்மையை எரித்தனர். முன்னதாக அக்கட்சி நிர்வாகிகள், வியாழக்கிழமை ( ஏப். 5) நடைபெறுகிற முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தரக்கோரி அனைத்து வணிகக் கடை உரிமையாளர்களடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அரியலூர் பேருந்து நிலையம் முன்பு வழக்குரைஞர் மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அரியலூர் மாவட்டத்தைச் இளைஞர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விராட் கோலி திமிர் பிடித்தவர்! அடங்காதவர்! - ரவி சாஸ்திரி

தனுஷ் - 55 படத்தின் முக்கிய அறிவிப்பு!

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வேதாந்தாவின் 4 புதிய நிறுவனங்கள்!

இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்!
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK


