பெரம்பலூர் அருகே இரும்புக் கம்பிகள் திருடிய நபரைப் பெரம்பலூர் போலீஸார் கைது செய்து, சனிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனர்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வயல்வெளிகளில் இருந்து கால்நடைகள் சாலைகளுக்கு வருவதைத் தவிர்க்கும் வகையில், இருபுறமும் இரும்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அந்த கம்பிகளை மர்ம நபர்கள் அறுத்து திருடிச் சென்றனர். இதுகுறித்து, சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்கள் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக, பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் காலனி தெருவைச் சேர்ந்த மூக்கன் மகன் முனியன் (57) என்பவர் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, முனியனைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து சுமார் 50 கிலோ இரும்பு கம்பிகளைப் பறிமுதல் செய்தனர். பின்னர், பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முனியனை, திருச்சி மத்திய சிறையில் சனிக்கிழமை இரவு அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக நம்மை ஆள நினைக்கும் அரசியல் பிழை நடக்ககூடாது: ப.சிதம்பரம்

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் முதல் பாடல்!

வீட்டின் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் பங்கு! அறிவது அவசியம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

