எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சாலையோர இரும்பு தடுப்புகளை திருடியவர் கைது

பெரம்பலூர் அருகே இரும்புக் கம்பிகள் திருடிய நபரைப் பெரம்பலூர் போலீஸார் கைது செய்து, சனிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனர். 

Updated On :22 அக்டோபர் 2018, 3:52 am

பெரம்பலூர் அருகே இரும்புக் கம்பிகள் திருடிய நபரைப் பெரம்பலூர் போலீஸார் கைது செய்து, சனிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனர். 
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வயல்வெளிகளில் இருந்து கால்நடைகள் சாலைகளுக்கு வருவதைத் தவிர்க்கும் வகையில், இருபுறமும் இரும்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அந்த கம்பிகளை மர்ம நபர்கள் அறுத்து திருடிச் சென்றனர். இதுகுறித்து, சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்கள் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
இதுதொடர்பாக, பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் காலனி தெருவைச் சேர்ந்த மூக்கன் மகன் முனியன் (57) என்பவர் திருடியது தெரியவந்தது. 
இதையடுத்து, முனியனைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து சுமார் 50 கிலோ இரும்பு கம்பிகளைப் பறிமுதல் செய்தனர். பின்னர், பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முனியனை, திருச்சி மத்திய சிறையில் சனிக்கிழமை இரவு அடைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.