அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

சாலையோர இரும்பு தடுப்புகளை திருடியவர் கைது

பெரம்பலூர் அருகே இரும்புக் கம்பிகள் திருடிய நபரைப் பெரம்பலூர் போலீஸார் கைது செய்து, சனிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனர். 

Updated On :22 அக்டோபர் 2018, 3:52 am

பெரம்பலூர் அருகே இரும்புக் கம்பிகள் திருடிய நபரைப் பெரம்பலூர் போலீஸார் கைது செய்து, சனிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனர். 
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வயல்வெளிகளில் இருந்து கால்நடைகள் சாலைகளுக்கு வருவதைத் தவிர்க்கும் வகையில், இருபுறமும் இரும்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அந்த கம்பிகளை மர்ம நபர்கள் அறுத்து திருடிச் சென்றனர். இதுகுறித்து, சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்கள் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
இதுதொடர்பாக, பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் காலனி தெருவைச் சேர்ந்த மூக்கன் மகன் முனியன் (57) என்பவர் திருடியது தெரியவந்தது. 
இதையடுத்து, முனியனைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து சுமார் 50 கிலோ இரும்பு கம்பிகளைப் பறிமுதல் செய்தனர். பின்னர், பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முனியனை, திருச்சி மத்திய சிறையில் சனிக்கிழமை இரவு அடைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.