அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர பூஜை

பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர்

Updated On :22 அக்டோபர் 2018, 3:50 am

பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குபேர யாக வேள்வியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில், பிரசித்தி பெற்ற சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு தனி சந்நிதி உள்ளது. மேலும், 12 ராசிகளுக்கும் 12 தூண்களில், 12 குபேர பெருமான் இருப்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும்.
இங்கு, ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரத்தில் குபேர யாக வேள்வி நடைபெறும். அதன்படி, ஜப்பசி மாத குபேர பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கணபதி ஹோமம், புன்யா வாஹனம், லஷ்மி ஹோமம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டு, 96 வகை மூலிகைப் பொருள்கள் யாக வேள்வியில் செலுத்தப்பட்டு மஹா பூர்னா ஹூதியும், தீபாரதனையும் நடைபெற்றது. 
தொடர்ந்து, அருள்மிகு சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு அரிசி மாவு, பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவிய பொடி, சொர்ணாபிஷேகம் நடத்தப்பட்டு, ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட கலசத் தீர்த்தங்களால் குபேர பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 
மேலும் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகளுக்கு பிறகு அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது. குபேர யாக வேள்வியில் கலந்துகொள்வதன் மூலம் கடன் பிரச்னைகள் தீரும், செல்வ வளம் பெருகும் என்பதால் திருச்சி, சேலம், பெரம்பலூர் உள்பட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குபேரப் பெருமானை தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.