தூக்கிட்டு இளைஞர் தற்கொலை

பெரம்பலூர் அருகேயுள்ள செங்குணம் கிராமம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் தர்மன் மகன் கஜேந்திரன் (27). ஓட்டுநரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.


பெரம்பலூர் அருகேயுள்ள செங்குணம் கிராமம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் தர்மன் மகன் கஜேந்திரன் (27). ஓட்டுநரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், கஜேந்திரன் தினமும் மது அருந்திவந்ததால், அவரது தந்தை தர்மன் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த கஜேந்திரன் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அவரது பெற்றோர் கஜேந்திரனை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com