மண் பானை சுடும்  எரியூட்டி அமைக்க விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மண்பானை சுடும் எரியூட்டி அமைக்க ஆர்வமுள்ள நிறுவனங்கள் பிப். 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டத்தில் மண்பானை சுடும் எரியூட்டி அமைக்க ஆர்வமுள்ள நிறுவனங்கள் பிப். 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 
இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை ஊராட்சியில், மரச்சிற்பம் செய்யும் திட்டத்துக்கு கணினி வரைபட உதவியுடன் கூடிய மரம் கடையும்  இயந்திரம் மற்றும் குரும்பலூர் பேரூராட்சியில் மண்பானை சுடும் எரியூட்டி அமைக்க ஆர்வமுள்ள நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை பிப். 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்திலும், w‌w‌w.‌p‌e‌r​a‌m​b​a‌l‌u‌r.‌n‌i​c.‌i‌n எனும் இணையதளம் மூலமாகவும் அறியலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com