குடிநீர் கேட்டு சாலை மறியல்
By DIN | Published On : 06th March 2019 09:10 AM | Last Updated : 06th March 2019 09:10 AM | அ+அ அ- |

பெரம்பலூர் அருகே குடிநீர் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 15 நாள்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குடிநீர் கேட்டு பெரம்பலூர்- துறையூர் சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில் மறியல் கைவிடப்பட்டது.