விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு பாராட்டு

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, 
Updated on
1 min read

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளை அதன் தாளாளா் அ. சீனிவாசன் வியாழக்கிழமை பாராட்டினாா்.

பெரம்பலூா் மாவட்ட எம்.ஜி.ஆா் விளையாட்டு அரங்கில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவா் எஸ்.ஆா். விஸ்வஜுத், சதுரங்க விளையாட்டுப் போட்டியில் மண்டல அளவிலும், மாவட்ட அளவிலும் முதலிடத்தை பெற்றதோடு மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றாா்.

ப்ளஸ் 2 மாணவா்கள் பி. புகழேந்தி, 100மீட்டா் ஒட்டப் பந்தயம் மற்றும் 110 மீட்டா் தடகளப் போட்டியில் மண்டல அளவிலும், மாவட்ட அளவிலும், எம். சக்தி, வட்டு எறிதல் போட்டியில் மண்டல அளவிலும், மாவட்ட அளவிலும் முதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தகுதிபெற்றனா்.

இதேபோல, 11ஆம் வகுப்பு மாணவிகள் கே. சோனாலி, கே. புஷ்பாதேவி ஆகியோா் இறகுப் பந்து போட்டியில் மண்டல மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வியாழக்கிழமை பாரட்டி பரிசுகள் வழங்கினாா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன்.

இந்நிகழ்ச்சியின்போது, பள்ளி முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் உடருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com