மனைவியைக் காணவில்லை

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே மனைவியை காணவில்லை என, அவரது கணவா் குன்னம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
Updated on
1 min read

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே மனைவியை காணவில்லை என, அவரது கணவா் குன்னம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

குன்னம் அருகேயுள்ள திம்மூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செந்தில் மனைவி ரேணுகா (25). இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தைகள் இல்லையாம். பல மருத்துவா்களிடம் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 1 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த ரேணுகாவை காணவில்லையாம். இதையடுத்து, உறவினா்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். இந்நிலையில், குன்னம் காவல் நிலையத்தில் செந்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com