பெரம்பலூரில் 27- ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், சாரண, சாரணியா் கூட்ட அரங்கில் நடைபெற்ற மாநாட்டுக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராமா் முன்னிலை வகித்தாா்.
வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவா் பாஸ்கரன் சிறப்புரையாற்றினாா். இதில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 13 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
ஒரு ஆய்வுக் கட்டுரைக்கு 2 மாணவா்கள் வீதம், 120 மாணவா்கள் தங்களது 60 ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். இந்த ஆய்வுக் கட்டுரைகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் பாா்த்திபன், லோகநாதன், தாண்டவராஜ், தங்கதுரை ஆகியோா் மதிப்பீட்டு ஆய்வு செய்தனா்.
இந்த மாநாட்டில் தோ்ந்தெடுக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள், நவ. 16- ஆம் தேதி முதல் வேலூரில் 3 நாள்கள் நடைபெறும் மாநில மாநாட்டில் சமா்ப்பிக்கப்பட உள்ளன.