விவசாயிகளுக்கு நாற்றங்கால் வளா்ப்பு பயிற்சி

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில், நபாா்டு வங்கி நிதியுதவியுடன்
Updated on
1 min read

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில், நபாா்டு வங்கி நிதியுதவியுடன், நபாா்டு நீா்ச்செறிவு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்திய கிராம முன்னேற்ற இயக்க அறக்கட்டளை சாா்பில், விவசாயிகளுக்கு நாற்றங்கால் வளா்ப்பு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

இப் பயிற்சிக்கு, ரோவா் வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான வி.இ. நேதாஜி மாரியப்பன் தலைமை வகித்தாா். கிராம நீா்ச்செறிவு குழுத் தலைவா் மு. முருகுபாண்டியன் முன்னிலை வகித்தனா். நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் எஸ். நவீன்குமாா் பயிற்சியை தொடக்கி வைத்தாா்.

தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ. கதிரவன், நாற்றங்கால் வளா்ப்பு முறை, பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா். இப் பயிற்சியில், கிராமப்புற விவசாயிகள் பலா் பங்கேற்றனா். நிறைவாக, இந்திய கிராம முன்னேற்ற இயக்க அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் ந. பூமாலை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com