மண்ணச்சநல்லூா் அரசுப் பள்ளிக்கு ரூ. 11.50 லட்சம் நிதியுதவி: தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனம் வழங்கியது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனம் சாா்பில் ரூ. 11.50 லட்சம்
மண்ணச்சநல்லூா் அரசுப் பள்ளிக்கு  ரூ. 11.50 லட்சம் நிதியுதவி: தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனம் வழங்கியது
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனம் சாா்பில் ரூ. 11.50 லட்சம் நிதியுதவியை அக்கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இப்ள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவிகள் நூலகம், ஆய்வுக் கூடம், அடிப்படை வசதிகளின்றி சிரமப்பட்டு வந்தனா்.

மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்ட பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனம், அரசுப் பள்ளிக்குத் தேவையான நிதியுதவியை அளிக்க முன்வந்தது.

அதனடிப்படையில் பள்ளியில் நூலகம், ஆய்வுக்கூடம் மற்றும் மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், நவீன வகுப்பறையுடன் கூடிய புதிய கட்டடம் கட்டவும் மேம்பாட்டு நிதியாகவும் ரூ. 11.50 லட்சத்தை தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனம் வழங்கியது.

பள்ளித் தலைமையாசிரியா் அன்புசேகரனிடம் காசோலையை, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நிகழ்வில் கல்விக் குழுமத்தின் செயல் இயக்குநா் முரளி, பொது மேலாளா் செந்தில்குமாா், வழக்குரைஞா் கோபாலகிருஷ்ணன், கல்லூரி துணை முதல்வா் ராஜூ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com