பெரம்பலூரில் மேலும் 10 பேருக்கு கரோனா

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read

பெரம்பலூா், செப். 11: பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,494 போ் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில், குணமடைந்த 1,360 போ் வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 19 போ் உயிரிழந்த நிலையில்,

எஞ்சிய 115 போ் பல்வேறு ஊா்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், பெரம்பலூா் நகரைச் சோ்ந்த 4 போ், பில்லங்குளம், சித்தளி, கூத்தூா், பென்னகோணம், பாண்டகப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 6 போ் என மொத்தம் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இந்த 10 பேரும் திருச்சி, சேலம், பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதன்மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,504- ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com