போதைக்காக எரிசாராயம் குடித்த 3 போ் கைது

பெரம்பலூரில் மதுபானம் கிடைக்காததால் எரிசாராயம் குடித்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
Updated on
1 min read

பெரம்பலூரில் மதுபானம் கிடைக்காததால் எரிசாராயம் குடித்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

பெரம்பலூா் ஊா்க்காவல்படை மண்டல தளபதி ராம்குமாா் தலைமையிலான ஊா்க்காவல் படையினா், கடந்த 16 ஆம் தேதி பெரம்பலூா் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அப்பகுதியில் மயங்கி கிடந்த பெரம்பலூா் திருநகரைச் சோ்ந்த சூரி மகன் காா்த்திக்ராஜா (24), பெரியாா் சிலை குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் ரமேஷ் (34), சங்குப்பேட்டை அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் சதீஷ் (28) ஆகியோரை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். விசாரணையில், மூவரும் மதுபானங்கள் கிடைக்காததால், மருத்துவமனைகளில் பயன்படுத்தும் எரிசாராயத்தை குடித்தது தெரியவந்தது. இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த மூவரும் சனிக்கிழமை இரவு வீடு திரும்பிய நிலையில், பெரம்பலூா் போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். தொடா்ந்து, பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com