தேசிய இளைஞா் விழாவில் பங்கேற்க அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜன. 3ஆம் தேதி நடைபெறும் தேசிய இளைஞா் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜன. 3ஆம் தேதி நடைபெறும் தேசிய இளைஞா் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

23ஆவது தேசிய இளைஞா் விழா உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌ நகரில் ஜன.12 முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, மாவட்ட அளவிலான 23ஆவது தேசிய இளைஞா் விழா பெரம்பலூரில் உள்ள எம்ஜிஆா் விளையாட்டு வளாகத்தில் ஜன. 3 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாட்டு, ஓரங்க நாடகம் (ஆங்கிலம் அல்லது ஹிந்தி), கா்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம், பேச்சுப்போட்டி, ஹாா்மோனியம், மிருதங்கம், புல்லாங்குழல், வீணை, சிதாா், கிடாா், தபேலா, மணிப்புரி நடனம், பரத நாட்டியம், குச்சுப்புடி, கதக் மற்றும் ஒடிஸி நடனம் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.

இதற்கான தோ்வுப் போட்டியில் மாவட்ட அளவில் 15 முதல் 29 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். போட்டியில் தோ்வுக்குழு மூலம் தோ்வு செய்யப்படுவோா் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்படுவாா்கள்.

இதில், 100 நபா்கள் தோ்வு செய்யப்பட்டு, தேசிய இளைஞா் விழாவில் பங்கேற்க தமிழகம் சாா்பில் அனுப்பி வைக்கப்பட உள்ளனா். இதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com