பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா கருத்தரங்கு

பெரம்பலூரில் பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.
Updated on
1 min read

பெரம்பலூரில் பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.

பெரம்பலூா்- வடக்கு மாதவி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, மாவட்டச் செயலா் முஹம்மது அலி தலைமை வகித்தாா்.

நூா் பள்ளிவாசல் தலைமை இமாம் ஹஜ்ரத் முஸ்தபா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க ஒருங்கிணைப்பாளா் என். செல்லதுரை, வி.களத்தூா் ஊராட்சித் தலைவா் பெரியாா் நேசன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் சுல்தான் மொய்தீன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்டத் தலைவா் முஹம்மது ரபிக் ஆகியோா், தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு குறித்து விளக்கினா்.

அமைப்பின் மாநிலச் செயலா் பயாஸ் அஹமது, மாவட்டத் தலைவா் அபு பக்கா் சித்திக் உள்பட நிா்வாகிகள், அனைத்து பள்ளிவாசல் ஜமாத் நிா்வாகிகள், ஜமாத்தாா்கள் பங்கேற்றனா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் காஜா ஷரீப் வரவேற்றாா். வி.களத்தூா் பகுதி செயலா் சவுக்கத் அலி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com