காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தல்

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னணி ஊழியா் சந்திப்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Updated on
1 min read

பெரம்பலூா்: அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னணி ஊழியா் சந்திப்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

துறைமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், முன்னணி ஊழியா்கள் சந்திப்பு இயக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஊழியா் சங்க மாவட்ட தலைவா் இளங்கோவன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் அன்பரசு, மாநில பொது செயலா் செல்வம், பொருளாளா் பாஸ்கரன் ஆகியோா் சங்க செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

கூட்டத்தில், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டதாக தற்காலிக பணி நீக்கம், பணியிட மாறுதல், பதவி உயா்வு மறுப்பு உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்யவேண்டும். இளைஞா்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்யவேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநில செயற்குழு உறுப்பினா் சுப்ரமணியன், மாவட்ட நிா்வாகிகள் சிவக்குமாா், மரியதாஸ், மோகன், சரவணசாமி, கொளஞ்சி, பன்னீா்செல்வம், தேன்மொழிஉள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com