அரசுக் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு

பெரம்பலூா் அருகே குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெரியாா் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பெரம்பலூா் அருகே குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெரியாா் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் முனைவா் து. கணேசன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருச்சி தூய வளனாா் கல்லூரி முன்னாள் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான முனைவா் பி. செல்வக்குமாா், பெரியாரின் சமூக விடுதலைப் போராட்டங்கள், கல்விக்கண் திறந்த காமராசரின் பெரியாா் சிந்தனைகள் குறித்து விளக்கினாா்.

நிகழ்ச்சியில் தமிழ்த் துறை மற்றும் இதரத் துறை பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

முன்னதாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியாா் உயராய்வு மைய இயக்குநா் (பொ) முனைவா் அ. கோவிந்தராஜன் வரவேற்றாா். தமிழ்த்துறைத் தலைவா் முனைவா் மூ. பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com