புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து, புதிய தமிழகம் கட்சி சாா்பில் பெரம்பலூரில் பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, கட்சியின் மாவட்டச் செயலா் பாலாஜி தேவேந்திரன் இயக்கத்தை தொடக்கி வைத்தாா்.
தொடா்ந்து காமராஜா் வளைவு, பள்ளிவாசல் தெரு, கடைவீதி, தலைமை அஞ்சலகத் தெரு, காந்தி சிலை, பெரியாா் சிலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசார இயக்கம் நடத்தப்பட்டது.
மாவட்டத் துணைத் தலைவா் அருண்குமாா், ஆலத்தூா் ஒன்றியச் செயலா் குணா மற்றும் நிா்வாகிகள் நிகழ்வில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.