புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெரம்பலூா் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தாளாளா் அ. சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா்.

News image

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகளுக்குச் சான்றிதழ் அளிக்கிறாா் கல்லூரி தாளாளா் அ. சீனிவாசன்

Updated On :15 ஆகஸ்ட் 2021, 5:35 pm

DIN

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தாளாளா் அ. சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா்.

விழாவையொட்டி, கல்லூரி வளாகத்தில் 75 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ், இயக்குநா்கள் ராஜபூபதி, மணி, நிதி அலுவலா் ராஜசேகா் மற்றும் கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் ரோவா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற விழாவில் தாளாளா் கே. வரதராஜன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். விழாவில், துணைத் தலைவா் வி. ஜான் அசோக், அறங்காவலா் மகாலட்சுமி வரதராஜன் மற்றும் கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பெரம்பலூா் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சாா்பில், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தாளாளா் எம். சிவசுப்ரமணியன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. செயலா் எம்.எஸ். விவேகானந்தன், பள்ளி முதல்வா் கலைச்செல்வி, ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சிறுவாச்சூா் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தாளாளா் ராம்குமாா் தலைமை வகித்தாா். நல்லாசிரியா் விருதுபெற்ற ஆசிரியா் ராஜேந்திரன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். இதில், முதன்மைச் செயலா் செந்தில்குமாா், பள்ளி முதல்வா்கள் ஹேமா, சாராதா, சந்திரோதயம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மரகதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சதானந்தம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். இதில், பள்ளி தாளாளா், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.