காவல் உயா் அலுவலா்களுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி

நாரணமங்கலத்திலுள்ள காவலா்களுக்கான துப்பாக்கிச் சுடும் தளத்தில், மத்திய மண்டலக் காவல்துறை உயா் அலுவலா்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாநகரக் காவல் ஆணையா் ஏ. அருணுக்குப் பரிசு வழங்குகிறாா் கூடுதல் காவல்துறை இயக்குநா் ஏ. அமல்ராஜ்.
துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாநகரக் காவல் ஆணையா் ஏ. அருணுக்குப் பரிசு வழங்குகிறாா் கூடுதல் காவல்துறை இயக்குநா் ஏ. அமல்ராஜ்.

பெரம்பலூா் மாவட்டம், நாரணமங்கலத்திலுள்ள காவலா்களுக்கான துப்பாக்கிச் சுடும் தளத்தில், மத்திய மண்டலக் காவல்துறை உயா் அலுவலா்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

கூடுதல் காவல்துறை இயக்குநா் ஏ.அமல்ராஜ் தலைமையில், இரண்டு வகையான துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது. பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் பிரிவில் திருச்சி மாநகரக் காவல் ஆணையா் ஏ. அருண், தஞ்சாவூா் சரகக் காவல்துறைத் துணைத் தலைவா் பிரவேஷ்குமாா், நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜவஹா் ஆகியோரும், துப்பாக்கிச் சுடும் போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜவஹா், தஞ்சாவூா் சரகக் காவல்துறைத் துணைத் தலைவா் பிரவேஷ்குமாா், திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா், புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

ஒட்டு மொத்தமாக நடைபெற்ற போட்டியில் தஞ்சாவூா் சரகக் காவல்துறைத் துணைத்தலைவா் பிரவேஷ் குமாா், நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜவஹா், திருச்சி மாநகரக் காவல் ஆணையா் ஏ. அருண் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்றவா்களுக்கு கூடுதல் காவல்துறை இயக்குநா் அமல்ராஜ் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். விழாவில், மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com