பெரம்பலூரில் மகாத்மா காந்தி நினைவு தினம்

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Updated on
1 min read

பெரம்பலூா்: மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் தங்க. தமிழ்ச் செல்வன் தலைமையில், நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், பயங்கரவாத ஒழிப்பு, கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சுரேஷ், பொருளாளா் ஆசைத்தம்பி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com